1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் டெங்குவை பார்த்து அச்சம் கொள்ள தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

1

சென்னை சைதாப்பேட்டையில் கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 8 பேருக்கு தலா ரூ.12,700, 3 நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 பேருக்கு தலா ரூ.4,300, விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் என நிவாரண உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது., முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைக் காலங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டும், குழு ஒன்றை அமைத்து புதியதாக எங்கெங்கே மழைநீர் வடிகால்கள் அமைய வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு குழுவின் அறிக்கை பெறப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி முழுமை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போதும் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,898.89 கோடி செலவில், 878.78 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு உள்ளது. எனவே சென்னையில் மழைநீர் தேக்கம் 100 சதவீதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.24.55 கோடி செலவில், 1,501.45 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. புதிய மழைநீர் வடிகால்களை கட்டியும், ஏற்கனவே இருக்கின்ற மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 ஆண்டுகள் தான் டெங்கு வரலாற்றிலேயே அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் 5 ஆயிரத்துக்கு உள்ளேயே உள்ளது. ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 400-க்குள்ளேயே உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக பதிவாகி இருக்கிறது. இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ளது. 

நவம்பர், டிசம்பர் மாதம் முடிவதற்குள், இந்த பாதிப்பு 6 ஆயிரமாக கூட தாண்ட வாய்ப்பில்லை என்று கருதுகிறோம். பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை, எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை. போதுமான அளவிற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான அளவிற்கு மருந்துகள் கையிருப்பும் இருக்கின்றது. சென்னையில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like