1. Home
  2. தமிழ்நாடு

நூதன வழி கையாண்ட மக்கள் ..! தெருநாய்களை விரட்டி அடித்த 'சொட்டு நீலம்' கலந்த தண்ணீர்..!

Q

கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரின், கே.டி. ஜே., நகரில் தெரு நாய் களின் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்பட் டனர். சாலையில் நடந்து செல்ல முடியவில்லை.
குழந்தைகள், தெருவில் விளையாட முடியவில்லை. மேலும், வீடுகள் முன் நாய்கள் அசுத்தம் செய்து வந்தன.
நடைபயிற்சி செய்யும் மூத்த குடிமக்கள், சிறார் களை நாய்கள் கடித்த சம்பவங்களும் அடிக்கடி நடந்தன. மாநகராட்சிக்கு புகார் அளித்தும் பயன் இல்லை. இதற்கிடையே இப்பகுதி மக்களே, நுாதன வழியை கையாண்டு, நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்தியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ட்ரீனி என்ற பெண், கே.டி.ஜே.. நகரில் வசிக்கிறார். இவரது சொந்த ஊரிலும் தெருநாய்கள் தொல்லை இருந்தது. அப்போது, அவர் துணி களுக்கு பயன்படுத்தும் சொட்டு நீலத்தை நீரில் கலந்து, பாட்டில்களில் நிரப்பி வீட்டு முன் வைத்தார்.அதன்பின் அங்கு நாய்கள் எட்டி பார்க்கவில்லை.
நீல நிறம் என்றால், நாய் களுக்கு அலர்ஜி. எனவே, நீல நிற பாட்டில்களை கண்டு பயந்து ஓடின. 
இது வெற்றி அடைந்து உள்ளது. இதைப் பார்த்து அப்பகுதி  பாட்டில்களில் சொட்டு நீலத்தை கலந்து வீட்டு வாசலில் வைத்துள்ளனர். நாய்களின் தொல் லையும் குறைந்துள்ளது.
அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'எங்கள் வீதி யில் அனைவரின் வீட்டு முன்பாகவும், நீல நிற தண்ணீரை பாட்டில்களில் நிரப்பி வைத்துள்ளோம். நாய்கள் வருவதில்லை; நிம்மதியாக இருக்கிறோம். எங்களின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது' என்றனர்.

Trending News

Latest News

You May Like