1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

1

மகாராஷ்டிராவில் திடீரென ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஏடிஎஸ் கொசுவால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போல இதுவும் ஆபத்தான வைரலால் பரவும் காய்ச்சல் ஆகும். சாதாரண காய்ச்சலை போல ஏற்படும் இந்த காய்ச்சலுக்கு உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் மரணம் வரை கொண்டு சென்றுவிடும். கடந்த காலங்களில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஜிகா வைரஸ் மகாராஷ்டிராவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் இந்த வைரஸ் பரவல் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அப்படி இருந்தால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படி இருககிறது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் கொசுக்கள் இல்லாததை உறுதி செய்ய, தனியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். ஜிகா வைரஸ் தொற்று யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like