1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! உங்க ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்..!

Q

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் தங்களுக்கு அருகிலுள்ள நியாய விலைக் கடையில் ஆதார் கார்டுடன் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அங்கு கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் செய்ய வேண்டும். ஆன்லைன் சரிபார்ப்புக்கு, 'Mera eKYC' செயலி அல்லது NFSA போர்ட்டலைப் பயன்படுத்தலாம். அதில் கேஒய்சி சரிபார்ப்பை ஆதார் எண் மற்றும் OTP மூலம் முடிக்கலாம்.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு கைரேகை சரிபார்ப்பில் பிரச்சினை ஏற்படலாம். குறிப்பாக வயதானவர்கள் ரேஷன் கடைக்கு வருவதும் கேஒய்சி சரிபார்ப்பு செய்வதும் சிரமமாக இருக்கும். எனவே இவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு விஷயத்தில் இன்னொரு முக்கியமான விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அந்த ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல், ரேஷன் பொருட்கள் எதையும் வாங்காமல் இருந்தால் அவர்களுடைய ரேஷன் கார்டை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் ரேஷன் கார்டை ரத்து செய்வது மாநில அரசின் பொறுப்பாக இருக்கும்.

ஒருவேளை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் இருந்து அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டால் அதை மீண்டும் பெற முடியும். அதாவது, அடுத்த மூன்று மாதங்களுக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடித்துவிட்டு ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்யலாம். அப்படி செய்ய முடியாவிட்டால் மீண்டும் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அது அதிக சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.

Trending News

Latest News

You May Like