1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! 7 துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Q

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும், டிசம்பர் 24ல் தமிழக வட மாவட்டங்களின் கடலோர பகுதி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி வரக்கூடும். மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. திடீர் காற்று, மழை உருவாகக் கூடிய சூழலை இது குறிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Trending News

Latest News

You May Like