மக்களே உஷார்..! இன்றும் நாளையும் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்..!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரம், பிப்., 18 வரை பெரும்பாலானப் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.