1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! வாட்டி வதைக்கும் வெயில்! 60 பேர் பலி!

1

டெல்லியில் கடந்த புதன்கிழமை நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக தில்லியில் 127 டிகிரி ஃபாரன்ஹிட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீா் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. 

பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிா்க்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனா். வெப்ப அலை பாதிப்பால் வெள்ளிக்கிழமையன்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பிகாரில் 14 பேரும், ஒடிஸாவில் 10 பேரும், ஜாா்க்கண்டில் 4 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த மாநிலங்களில் 1,300 க்கும் மேற்பட்டோா் வெயில் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

வெயிலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் மே 31 முதல் ஜூன் 2 வரையிலும் அரியானா, சண்டீகா் மற்றும் டெல்லியில் மே 31ஆம் தேதியில் (சனிக்கிழமை) புழுதிப்புயல் வீசக்கூடும். தென்மேற்கு இந்தியாவில் மே 31 முதல் ஜூன் 2 வரை லேசான அல்லது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. பஞ்சாப், அரியாணா, சண்டீகா், தில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதி கடுமையான வெப்ப அலை காணப்படும்.

மேற்கு வங்கத்தில் ஜூன்1-ஆம் தேதியும், கொங்கன் மற்றும் கோவாவில் மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலைக் காணப்படும். உத்தர பிரதேசத்தில் மே 31ஆம் தேதி மற்றும் பஞ்சாப், அரியானா, பீகாா், டெல்லி, ஒடிசா மற்றும் சண்டீகரில் மே 31 மற்றும் ஜூன் 1ஆம் தேதியில் இரவிலும் வெப்பம் நிலவும்.

வெப்ப அலையால் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறையாமல் வெப்ப அலை தொடா்ந்து வரும் நிலையில் இதுவரை குறைந்தது 54 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனா். அதிகபட்சமாக பிகாரில் இதுவரை 32 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்துவிட்டனா். வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்ததால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கு மேற்பட்டோா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உபி, பீகாரில் தோ்தல் பணியாளா்கள் 25 போ் உயிரிழப்பு:

வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா். உத்தர பிரதேசம், பீகாரில் பல்வேறு இடங்களில் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா்கள் உயிரிழந்தனா். இந்த மாநிலங்களில் இன்று (ஜூன் 1) இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த 17 பேரில் 13 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊழியா்களாவா். தீவிர காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவா்கள் மிஸாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

Trending News

Latest News

You May Like