1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! வட மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'..!

1

டெல்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாதத்தின் தொடக்கத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று (ஜூன் 18) 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், இன்று மேலும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியாணா, சண்டீகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 27ம் தேதிக்குப் பிறகு வடமாநிலங்களில் வெப்ப அலை குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like