மக்களே உஷார்..! இனி ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டுகள் நீக்கம்..!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு கோடியே 11 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் கோதுமை உள்ளிட்ட ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சூழலில், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் எடுக்காத நுகர்வோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பிறகும் நுகர்வோர் வரவில்லை என்றால் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான மற்றொருவரின் பெயரைச் சேர்த்து காலி இடம் நிரப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தில் ஒவ்வொரு மாதமும் கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. தகுதியான பயனாளிகள் மட்டுமே ரேஷன் பெறுவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் பலர் பல மாதங்களாக ரேஷன் வாங்க கடைக்கு வருவதே இல்லை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியான குடும்பங்களுக்கும் உதவி கிடைக்காமல் போகிறது. பல நுகர்வோர்கள் மாதந்தோறும் ரேஷன் வாங்க வருவதில்லை. எஞ்சியிருக்கும் உணவு தானியங்களை ரேஷன் கடைக்காரர்கள் ஸ்டாக் வைத்திருந்தாலும், 6 மாதங்களாகியும் பல நுகர்வோர் உணவு தானியங்களை வாங்க வருவதில்லை.
இவர்கள் அனைவரின் பெயர்களும் இனி கடைக்கு வெளியே உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் நபர்கள் சந்தப்பட்டவர்களிடம்ம் தகவல் தெரிவிக்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகும் ரேஷன் கடைக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு ரேஷன் வாங்க விரும்பவில்லை என்றே கருதப்படும். அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான மற்ற நபர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கார்டு வழங்கப்படும்.
இதற்காக, ஆறு மாதங்களாக உணவு தானியங்கள் வாங்காத நுகர்வோரை கண்டறிய, துறை அலுவலர்களுக்கு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சில காரணங்களால் அவர்களால் வரமுடியவில்லை என்றால் பரவாயில்லை. வேண்டுமென்றே அவர்கள் வாங்க வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
.png)