மக்களே உஷார்..! அடுத்த சில தினங்களுக்கு இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/91554c1a5db61c81582537fcedebab7f.jpg?width=836&height=470&resizemode=4)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 03.04.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிம இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது