1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு...

1

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது எனவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்றும், வெயிலை பொறுத்தவரை கரூர் மாவட்டம் பரமத்தியில் அதிகபட்சமாக 35.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், 10ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய
பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை எழுந்துள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதே சமயம் வானிலை ஆய்வு மையம் சொன்னது போல வரும் 10ஆம் தேதி டெல்டாவில் மழை பெய்தால் விவசாயிகளுக்கு பேருதவியாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like