மக்கள் அதிர்ச்சி..! தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை..!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை முதியவர் ஒருவரை தாக்கியுள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முதியர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பள்ளியில் உள்ள மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்குள் இந்த சிறுத்தை எப்படி நுழைந்தது? என வனத்துறையினருக்கும் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிறுத்தையை பிடிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளார். பள்ளிக்குள் சிறுத்தைகள் புகுந்துள்ளதாக வெளியான செய்தியை அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
— Raj News Tamil (@rajnewstamil) June 14, 2024
அருகே உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் #cheetah #school #thirupathur #rajnewstamil pic.twitter.com/eVKk1M6wda