மக்கள் அதிர்ச்சி..! 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத விலை ஏற்றம்..!
வட மாநிலங்களில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து அங்கு அதிகளவில் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுவே விலை முட்டை விலை உயர்வு க்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள்.தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.85 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்த்தி ரூ. 5.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (3-12-2024) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (4-12-2024) காலை முதல் அமலுக்கு வருகிறது.
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.90 காசுகள் என்பது கடந்த 54 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் இது முறை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் விலை உயர்ந்துள்ளது.