1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : மக்கள் பீதி..!ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் மரணம்!

Q

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த ராணுவ தாக்குதல்கள் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினர்.

 

 

ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இருந்தனர்.

 

 

இந் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் எல்வையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சண்டை நிறுத்தம் என்று இரு நாடுகளும் அறிவித்த 3 மணி நேரத்தில் கதுவா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்ந்துள்ளது.பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் வகையில் பாக்., ராணுவம் தாக்கி வருகிறது. இதற்கு இந்தியாவும் உடனடி பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது;

சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காஷ்மீரில் குண்டுசத்தம் கேட்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


 

null


  ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இன்று (மே 10) நடத்தி வரும் திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தியாஸ் உயிரிழந்துள்ளார். மேலும், 7 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த 3 மணி நேரத்திற்குள் எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் மீண்டும் தனது தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like