மக்கள் மகிழ்ச்சி..! சென்னையில் கட்டப்படும் புதிய பாலங்கள்...!

சென்னை மாநகராட்சி சார்பில் சின்ன நொளம்பூரில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுகிறது.
இது பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் யூனியன் ரோட்டையும் இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது. இங்கே தூண்கள் அமைக்கும் வேலையானது தற்போது நடந்து வருகிறது. "4 ஆயிரத்து 396 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் கான்கிரீட் தூண்கள் அமைத்து, தார் சாலை போடும் பணி நடக்கும்" என்று பாலங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்போது வாகனங்கள் முகப்பேர் அல்லது மதுரவாயல் வழியாகத்தான் ஆற்றைக் கடக்கின்றன. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே 5 கி.மீ - 6 கி.மீ தூரம் உள்ளது. இதனால், நடுவில் இருக்கும் மக்கள் நீண்ட தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. இது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கிறது. புதிய பாலம் இந்த நெரிசலைக் குறைக்கும்.
"இங்கே ஏற்கனவே ஒரு சிறிய பாலம் இருக்கிறது. அது ஆபத்தான நிலையில் உள்ளது. புதிய பாலம் கட்டியதும் அது இடிக்கப்படும்" என்று அதிகாரி கூறினார். இன்னொரு பாலம், இதிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் கட்டப்படுகிறது. இங்கே சென்னை மாநகராட்சி சார்பில் இன்னும் கான்கிரீட் தூண்கள் அமைக்கவில்லை.
லாரிகள், மினி வேன்கள், டெம்போ போன்ற வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல நீண்ட தூரம் சுற்றி வருகின்றன. ஏனென்றால், இங்கே ஆற்றின் குறுக்கே செல்ல வழியில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் சாலையை அகலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த சாலையானது கூவம் ஆற்றின் ஓரமாக செல்கிறது. இரண்டு பாலங்களும் இங்கேதான் இணையும். ஆற்றங்கரை மற்றும் ரோட்டில் உள்ள சுமார் 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
"பாலம் வேலை முடிந்ததும், நிறைய வாகனங்கள் இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் இன்று செல்லலாம். அதனால், இதை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். மதுரவாயல் மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள டிராஃபிக்கை தவிர்க்க இந்த ரோட்டிற்கு வருகின்றன" என்று அதிகாரி கூறினார்.
இந்த பாலங்கள் கட்டப்படுவதால் அந்த பகுதியில் இருக்கும் வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் சுற்று வழிப்பாதை காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும் அதிக தூரம் சுற்றி வந்ததால் அதிக எரிபொருள் செலவானது. இனி அந்த செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த பாலங்கள் அப்பகுதி மக்களின் வாழ்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.