1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த 3 நாட்கள் பாஸ்போர்ட் சேவா இணையதளம் இயங்காது..!

1

இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கிய அடையாள அட்டையாக பாஸ்போர்ட் எனும் கடவு சீட்டு உள்ளது. இந்த பாஸ்போர்ட்  பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் அப்பாய்ண்ட்மென்ட் (முன்குறிப்பிட்ட தேதி) பதிவு செய்து அந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


 

null


 

Trending News

Latest News

You May Like