பெற்றோர்களுக்கு குழப்பம்..! சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியாகிறதா ?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். எனினும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியிடப்படும் என்றும் மே 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. எனினும் இதற்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துள்ளது. இது போலிச் செய்தி என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
#CBSE Fact Check#Fake News Alert pic.twitter.com/UX20JwHN9e
— CBSE HQ (@cbseindia29) May 8, 2025