பழனி கோவில் ரோப்கார் சேவை இன்று தொடக்கம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a1a2803c6a54bdcaf8ff02761437ef53.jpg?width=836&height=470&resizemode=4)
பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நேற்று ஒருநாள் நிறுத்தப்பட்டது.
பழுதுகள் சரிசெய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு இன்று மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.