1. Home
  2. தமிழ்நாடு

பழனி கோவில் ரோப்கார் சேவை இன்று தொடக்கம்..!

1

பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக படிவழிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை ஆகியவை உள்ளன. இந்நிலையில் ரோப்கார் சேவை வருடத்திற்கு 45 நாட்களும், மாதத்திற்கு 1 நாளும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இதன்படி மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நேற்று ஒருநாள் நிறுத்தப்பட்டது.

பழுதுகள் சரிசெய்யப்பட்டு, ரோப்கார் பெட்டிகள் பராமரிப்பும் மேற்கொள்ளப்பட்டு இன்று மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like