1. Home
  2. தமிழ்நாடு

சூதாட்ட புகாரில் கழுதையைக் கைது செய்த பாகிஸ்தான் போலீசார் - வைரலாகும் வீடியோ !

சூதாட்ட புகாரில் கழுதையைக் கைது செய்த பாகிஸ்தான் போலீசார் - வைரலாகும் வீடியோ !


சூதாட்ட ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டதால் பந்தயத்தில் ஓடிய கழுதை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள ரஹீம் யார்கான் பகுதியில் கழுதைகள் ஓட்டப்பந்தயம் நடந்துள்ளது. அது ஒரு சூதாட்ட ஓட்டப்பந்தயம் என  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து பலர் தப்பியோடிய நிலையில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சூதாட்ட புகாரில் கழுதையைக் கைது செய்த பாகிஸ்தான் போலீசார் - வைரலாகும் வீடியோ !

மேலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் கழுதையையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20ஆயிரத்தையும் கைப்பற்றி உள்ளனர். துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கழுதையின் பெயரையும் போலீசார் சேர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட கழுதை காவல் நிலையத்திற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டுள்ளது. சூதாட்ட ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட கழுதை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like