பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/59bfb2402a6c10c8b5dc8ef7f8775db1.jpg?width=836&height=470&resizemode=4)
அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் தரார். பாகிஸ்தானில் பிறந்த இவர், 1990-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அந்நாட்டின் முக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார்.
குடியரசு கட்சியில் இருக்கும் அவர், டிரம்ப்பின் ஆதரவாளர். தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் உள்ள இவர், பால்டிமோர் சட்டப் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கூறியதாவது:
மோடி வலிமையான தலைவர். இந்தியாவை புது உச்சத்துக்கு கொண்டு சென்றார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக பதவி ஏற்பார். மோடியால், இந்தியா மட்டுமல்ல, ஆசிய பிராந்தியமும், உலகமும் பலன்பெறும்.
மோடி முக்கியமான தலைவர். அவர் இயற்கையாக பிறந்த தலைவர். கடினமான சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு வந்த இந்திய பிரதமர்களில் மோடி ஒருவர். பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தையை மோடி துவக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அமைதியான பாகிஸ்தான் என்பது, இந்தியாவுக்கும் நலம் பயக்கும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பது அனைத்து இடங்களிலும் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. 97 கோடி இந்திய மக்கள், தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி உள்ளது பெரிய அதிசயம்.
உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம். 2024-ம் ஆண்டிலும் மோடியின் செல்வாக்கு இந்தியாவில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில், இந்திய ஜனநாயகத்தில் இருந்து மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். மோடியைப் போன்று, பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.