1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்! 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம்..!

1

பகல்காமின் பைசரன் என்ற புல்மேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் நுழைந்து தூப்பாக்கிசூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 22 சுற்றுலா பயணிகள் சூட்டுக் கொல்லப்பட்டனர். 12 பேர் கயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் மேற்கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. முதலாவதாக இந்தியா பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதேபோல் பாகிஸ்தானியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுதல், பாகிஸ்தானியர்களின் விசா வழங்குவதை ரத்து செய்தல், அட்டாரி - வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான், இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா முழுமையாக போருக்கு தயாராவதாக அர்த்தம். நாங்கள் இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி உள்ளிட்ட ஏவுகணைகள் உள்ளன. மொத்தம் 130 அணுஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் இந்தியாவுக்காக வைத்துள்ளோம். 

எங்களிடம் உள்ள ராணுவ ஆயுதங்கள், ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் என அனைத்தையும் வெறும் காட்சிப் பொருளாக மாடும் நாங்கள் வைத்திருக்க வில்லை.  நாங்கள் எங்கெல்லாம் அணுஆயுதம் வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். எங்களிடம் பாலிஸ்டிங் ஏவுகணை உள்ளது. அது உங்களை இலக்காக கொண்டு தாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

இந்தியாவை ஒப்பிடும்போது பாகிஸ்தானில் ராணூவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் வலிமை குறைவாகவே உள்ளது. ஆள் பலமாக இருந்தாலும் சரி ஆயுத பலமாக இருந்தாலும் சரி அனைத்திலுமே இந்தியா மேலோங்கி இருக்கிறது. பாகிஸ்தானை போல நம்மிடமும் அணுஆயுதங்கள் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் எந்த நாடும் அணுஆயுதத்தை பயன்படுத்தவில்லை. சொல்லப்போனால் அணுஆயுதம் ஒரு காட்சிப்பொருளாகவும் மிரட்டல் விட மட்டுமே இருந்து வருகிறது. 

Trending News

Latest News

You May Like