1. Home
  2. தமிழ்நாடு

பகீர் வீடியோ : வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரியாணியுடன் பழைய பிரியாணி கலந்து விற்பனை..!

1

ஆரணி அடுத்து உள்ள தேவிகாபுரம் பஜார் வீதியில் பல பிரியாணி கடைகள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவிகாபுரம் பஜார் வீதியில் ஒரு அசைவ உணவகத்தில் விற்பனையாகாமல் மீதி இருந்த பழைய பிரியாணியை மீண்டும் சூடு செய்து அவற்றை புதிய பிரியாணியுடன் கலந்து விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி வைரலானது.

Briyani

இதேபோன்று இப்பகுதியில் உள்ள பேக்கரிகளில் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் கேக் லட்டு போன்ற இனிப்பு வகைகளில் புழு உருவாகி உள்ளது. மேலும் ஈக்கள், தேனீக்கள், வண்டு ஆகியவை நெளிந்து கொண்டிருப்பதும் வீடியோ வைரலாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்களை பார்க்கும் ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இங்கு அசைவ ஓட்டகளில் பழைய உணவுகளை சூடு செய்து விற்பதும், சிக்கன் போன்றவைகள் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. பாஸ்ட்புட் வகைகள் விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. 



இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம்  தலையீட்டு விரைந்து  நடவடிக்கை எடுத்து தரமற்ற முறையில் உணவு திண்பண்டம் செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like