1. Home
  2. தமிழ்நாடு

பாருக்கு வெளியே உரிமையாளர் சுட்டுக்கொலை.. தாதா கும்பல் மீண்டும் மோதல்..

பாருக்கு வெளியே உரிமையாளர் சுட்டுக்கொலை.. தாதா கும்பல் மீண்டும் மோதல்..


கர்நாடகா மாநிலம் பெங்களூரில் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாக பிரிகேட் ரோடு கருதப்படுகிறது. அங்கு டூயட் பார் என்ற பெயரில் மணிஷ் என்ற சரவதம் ஷெட்டி மதுபான கடை நடத்தி வந்துள்ளார்.

இவர் இரவு 9 மணிக்கு தனது மதுபான பாருக்கு வெளியே நடந்து வந்தசென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த இருவர் துப்பாக்யில் சுட்டத்தில் மணிஷ் சரிந்து விழுந்து துடித்துள்ளார். இதனை கண்ட அவரது ஆட்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.

எனினும் வழியிலேயே மணிஷ் என்ற சரவதம் ஷெட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்தி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பாருக்கு வெளியே உரிமையாளர் சுட்டுக்கொலை.. தாதா கும்பல் மீண்டும் மோதல்..

அப்போது ஹோண்டா டியோ பைக்கில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பைக்கை அங்கேயே கொலையாளிகள் விட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மேலும் செல்போன் அழைப்பு ஒன்று வந்ததால் மணிஷ் ஷெட்டி பார்க்கு வெளியே வந்துள்ளார். இதனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா? அவருக்கு தெரிந்த நபர் கூறியதால் வெளியே வந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாருக்கு வெளியே உரிமையாளர் சுட்டுக்கொலை.. தாதா கும்பல் மீண்டும் மோதல்..

இதனிடையே, மணிஷ் ஷெட்டிக்கு அங்குள்ள தாதா பன்னஞ்சே ராஜாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது எதிர்தரப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

பாருக்கு வெளியே உரிமையாளர் சுட்டுக்கொலை.. தாதா கும்பல் மீண்டும் மோதல்..

எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரிகேட் ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like