1. Home
  2. தமிழ்நாடு

எதிரி நாட்டு பிரதமரையே ஓட விட்டாங்கப்பா நம்ம ராணுவம் - பிரேமலதா..!

Q

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் நகரங்கள் மீது இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பதுங்கு குழியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, "தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியாவுக்காகவும் இந்திய அரசுக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரம் இது.
தொடர்ந்து தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது. இந்த நேரத்தில் நமது ராணுவம் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்து பாகிஸ்தானை மிரள வைத்துள்ளார்கள். இன்றைக்கு அவர்களுடைய பிரதமர் பதுங்கு குழியில் பதுங்குகின்ற ஒரு நிலையை நமது ராணுவம் மிக சிறப்பாக செய்து உள்ளார்கள். எனவே நிச்சயமாக இந்த போரில் இந்தியா வெற்றி பெறும்.
எப்படி கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதோ அதேபோல் இந்த தீவிரவாத தாக்குதலை முறியடித்து இந்தியா வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எனவே ஒட்டுமொத்த மக்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்து நம் இந்தியாவுக்காகவும் நம் மக்களுக்காகவும் இந்திய ராணுவத்திற்காக நம் பிரார்த்தனையை முன் வைப்போம். நிச்சயம் வெல்வோம்.
முப்படையும் இன்றைக்கு மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த போர் தொடங்கியதில் இருந்து இன்று இரவு முழுவதும் தூங்கா இரவாக இருந்தாலும் நம் நாட்டிற்காக நம் மக்களுக்காக நம் எல்லையில் இருந்து நம் முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளும் சேர்ந்து இன்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து இந்த சவாலில் மாபெரும் வெற்றி பெறுவோம். மிக சிறந்த முறையில் எல்லையில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கின்ற ராணுவத்திற்கு தலை வணங்க வேண்டும்" இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like