தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; நாளை 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! இதில் உங்க மாவட்டம் இருக்கா ?
இன்று (மே 24) 4 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
* தென்காசி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,
அதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (மே 25), நாளை மறுநாள் (மே 26)
சிவப்பு அலர்ட்
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள் ஆகிய இரண்டு மாவட்டகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை (சிவப்பு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
மஞ்சள் அலர்ட்
திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
மே 27ம் தேதி
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஆகிய 2 மாவட்டங்களில் மே 27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ளது.
மஞ்சள் அலர்ட்
அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 28ம் தேதி
மே 28ம் தேதி,நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.