இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (ஜன. 07) 3 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.