இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/fe34c743a2c6af5b8b949003ada134b5.jpg?width=836&height=470&resizemode=4)
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (ஜன. 07) 3 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.