1. Home
  2. தமிழ்நாடு

ஜெயலலிதாவை தவறாகப் பேசிய அண்ணாமலை உடன் இருந்த ஓபிஎஸ்க்கு பேசுவதற்கு தகுதி இல்லை - கே.பி.முனுசாமி காட்டம்..!

1

மக்களவை தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் ஓ.பன்னர்செல்வம் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்.” இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித் தலைவர், மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்று அதிமுக அழிவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என்று சசிகலா அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி; குழப்பத்தை ஏற்படுத்தவே அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா அழைப்பு விடுக்கிறார். அதிமுக தலைவர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரமாகியும் யாரும் சென்றதாக தெரியவில்லை. அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிமையில்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து, அவரோடு கூட்டணி அமைத்தவர் ஓ.பி.எஸ்.. பாஜகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவை தவறாகப் பேசிய அண்ணாமலை உடன் அமர்ந்த ஓபிஎஸ்க்கு பேசுவதற்கு தகுதி இல்லை. தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, அதிமுக தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது? என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; அண்ணாமலை பொய் சொல்வதில் வல்லவர். தமிழக மக்களின் நலன் கருதியே பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டோம். மக்களவை தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். 2019 தேர்தலில் கூட்டணியில் இருந்த நாங்கள் வாங்கிய வாக்கு 19 சதவீதம் பெற்றோம். தற்போது தனித்து 20.46 சதவீதம் வாங்கி உள்ளோம். அதிமுகவின் வாக்கு சதவீதம் 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இவ்வாறு கூறினார்.

Trending News

Latest News

You May Like