1. Home
  2. தமிழ்நாடு

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைப்பு..!

1

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எப்படியாவது அதிமுகவுடன் இணைந்து விடலாம் என்று முயற்சித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைப்பை தொடங்கி பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைந்தார்.

தனக்கு நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 5 சீட்டுகளையாவது பாஜக தலைமை ஒதுக்கும் என நினைத்த ஓபிஎஸ்-க்கு ஒரே ஒரு சீட் மட்டுமே கிடைத்தது. அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இது அவரையும், அவரது ஆதரவாளர்களையும் சோர்வடையச் செய்துள்ளது. 

இந்நிலையில்தான், ஓபிஎஸ் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 20-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும், அனைத்து கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பாஜக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்தக்கட்ட வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காகவும் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like