1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் வாக்கு பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் தெரியும் : செல்லூர் ராஜு..!

1

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவுக்கு நிலையான கொள்கை கிடையாது. நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்த போட்டது திமுக தான். நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி இதுவரை சொல்லவில்லை. திமுக காலத்தில் தான் தமிழர்களின் உரிமைகள் பறிபோனது என தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை, அண்ணாமலை விமர்சித்தது குறித்த பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் உள்ள ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான் என்றும், மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது என்ற மமதையில் அண்ணாமலை மறைந்த தலைவர்களை மதிக்காமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார் என்று சாடினார். 

மேலும், அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும். அதன் பிறகு அண்ணாமலை இருப்பாரா என்பது தெரியும் என்று கூறினார்.

எல்லா சமூகத்ததையும், மதத்தினரையும் அரவணைத்து செல்வது தான் கட்சி. பாரதிய ஜனதா அப்படி கிடையாது, ஒரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்துகின்றது என்பது தான் மன வேதனை தருகிறது. பிரதமரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம் இல்லை.ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசுவது வெறும் தேர்தல் ஸ்டண்ட் தான் என கூறினார்.   

Trending News

Latest News

You May Like