1. Home
  2. தமிழ்நாடு

பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே தவெக பூத் கமிட்டிக்குள் அனுமதி..!

Q

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இந்த கருத்தரங்கில் சேலம் ஈரோடு நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து சுமார் 8000 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளார்கள். அவர்களுக்கு மக்கள் பிரச்சனையை எப்படி கையாள்வது மற்றும் தற்போது ஆட்சித் திட்டங்களில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கருத்தரங்கை முன்னிட்டு கேரளாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கருத்தரங்கு நடைபெற உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நுழைவாயில் வழியாக கட்சியின் நிர்வாகிகள் வருவார்கள் எனவும் மற்றொரு நுழைவு வாயில் வழியாக கட்சியின் தலைவர் விஜய் வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக பிஸ்கட், ஜூஸ், வாட்டர் பாட்டில் மற்றும் ஸ்னாக்ஸ் ஆகியவை அடங்கிய பைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் கியூ ஆர் கோடு பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்த கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது. தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like