1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் !! அமைச்சரின் பேச்சால் சர்ச்சை...

கொரோனாவில் இருந்து ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் !! அமைச்சரின் பேச்சால் சர்ச்சை...


மற்ற மாநிலங்களை போன்று , கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அங்கு எப்போதும் இல்லாத வகையில் நேற்று மட்டும் 3,176 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக பெங்களூருவில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இப்போது வரும் 22ம் தேதி வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , மக்களை கொரோனா தொற்றில் இருந்து அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது ; அடுத்து வரும் 2 மாதங்களில் கொரோனா தொற்றுகள் அதிகமாகலாம்.அப்போது நம்மை யார் காப்பாற்றுவார் ? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like