1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்.. தமிழகத்தில் இன்று முதல் அமல் !



ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்தில் வசிப்போர் அப்பகுதியில் இருக்கும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். இதேபோல் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பயன்பெற முடியும்.

தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சோதனையில் முறையில் அமல்படுத்தப்பட்டது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்.. தமிழகத்தில் இன்று முதல் அமல் !

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் இன்று முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை, தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சீபுரம், திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்.. தமிழகத்தில் இன்று முதல் அமல் !

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அங்கு இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டதோடு, கடை ஒன்றிற்கு 5 சதவீத பொருட்கள் கூடுதலாக வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like