1. Home
  2. தமிழ்நாடு

ஒன்ஸ் மோர் ப்ளீஸ்..! ரீலிஸ் நல்ல வரணும் என ஆசைப்பட்ட டாக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

1

ம.பி-யில் உள்ள கோவிலில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக டாக்டர் பிரவுல்லா ஸ்ரீவஸ்தவா என்பவர் இருந்து வருகிறார். .

இந்நிலையில், கோவில் புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்த போது அங்கு வந்த டாக்டர் பிரவுல்லா, தொழிலாளர்களுடன் சேர்ந்து கோவில் திருப்பணியில் ஈடுபட்டார். அப்போது, திடீரென 6 அடி ஆழ குழிக்குள் தவறி விழுந்து விட்டார். இதனால், சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவத்தின்போது, அவர் குழிக்குள் சிமெண்டை கொட்டினார். ஆனால், அதனை புகைப்படம் எடுத்தவர், படம் சரியாக வரவில்லை. அதனால், மீண்டும் அப்படி செய்யுங்கள் என கூறியிருக்கிறார். இதனால், மற்றொரு முறை சிமெண்டை வாங்கி குழிக்குள் கொட்ட முற்பட்டார். அப்போது, அவர் நின்றிருந்த பகுதியில் இருந்த மண் குழிக்குள் சரிந்து விழ அதனுடன் சேர்ந்து அவரும் குழிக்குள் சரிந்து விட்டார்.

இந்த சம்பவத்தில், அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டார். டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரீல்ஸ் நல்ல வர வேண்டும் என நினத்தவருக்கு பாதகமா போய் முடிந்தது.


 

Trending News

Latest News

You May Like