மீண்டும்..மீண்டுமா..?தங்கம் விலை மீண்டும் உயர்வு

தமிழகத்தில் நேற்று (ஜன.,31) ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 61,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து, 7,730 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (பிப்.,01) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ரூ. 7,745க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,320 விற்பனை செய்யப்படுகிறது.பட்ஜெட் எதிரொலியால் தங்கத்தின் விலை ₹62,000ஐ கடந்து உச்சம் தொட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம் ₹45 உயர்ந்து, ₹7,790க்கு விற்கப்படுகிறது.