ஜூன் 1-ம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆலோசனை கூட்டம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/95409bc9d07d2e26396a37c62ed389dd.jpg?width=836&height=470&resizemode=4)
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்து ஆலோசித்திட, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தி.மு.க. வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற 01-06-2024 (சனிக்கிழமை) காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், கட்சியின் வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.