1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்..!

1

சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம்ப்பக்கத்தில் புதிய பஸ் நிலையம்  அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்ட சில நாட்களில் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகருக்குள் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி கோரினர். இதனையடுத்து நீதிமன்றம் இடைகால உத்தரவாக ஜூன் 2-ம் தேதி வரை சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வர அனுமதித்தது.

இதனையடுத்து போக்குவரத்து துறை நாளை 31-ம் தேதிக்கு பிறகு ஜூன் 1-ம் தேதி முதல் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கபட வேண்டும் என மீண்டும் உத்தரவிட்டவுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முடிச்சூர் அருகே அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்ததில் போதிய இடவசதி இல்லை என கூறப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வாடகை முறையில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like