1. Home
  2. தமிழ்நாடு

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு.. டிச.31 வரை 144 தடை உத்தரவு..!

ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு.. டிச.31 வரை 144 தடை உத்தரவு..!


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும், அது எந்த பலனும் தரவில்லை. வெளிநாட்டு பயணிகள் மூலமாக இந்தியாவிற்குள் அந்த வைரஸ் நுழைந்துள்ளது.

தற்போது, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இதுவரை 13 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மும்பையில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று அதிகாலை 12.01 மணி முதல் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். இதன்படி அடுத்த 14 நாட்களுக்கு நகரில் பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் எதையும் நடத்த முடியாது. இதேபோல, பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படாது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா தடுப்பு குறித்து அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல சிறிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 50 சதவீதம் பேர் மட்டும் கலந்து கொள்ளவேண்டும், ஆயிரம் நபருக்கு மேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் அது குறித்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக மும்பையில் 13 பேரும், புனே மாவட்டத்தில் 12 பேரும், உஸ்மனாபாத்தில் 2 பேரும், கல்யாண் டோம்பிவிலி, நாக்பூர், லாத்தூர், வசாய் விரார், புல்தானா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் குணமடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like