4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை அளித்த முதியவர்..
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமதாஸ், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், தமது கடைக்கு வரும் சிறுமிகளிடம் விளையாடுவது போன்று உடலில் அங்குஇங்கு கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ்.
இதுகுறித்து அக்குழந்தை தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in