1. Home
  2. தமிழ்நாடு

நள்ளிரவில் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞரால் அதிர்ச்சி !

நள்ளிரவில் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞரால் அதிர்ச்சி !


நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ளது கோரி காலனி என்ற கிராமம். இங்கு 68 வயதான மூதாட்டி ஒருவர், கூலி வேலை செய்து வசித்து வருகிறார். ஏற்கனவே கணவர் இறந்துவிட்டதால் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், இரவு நேரத்தில் மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் குதித்துள்ளார். அப்போது உறங்கிக்கொண்டிந்த மூதாட்டியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்நபர் தப்பியோடிவிட்டார்.

நள்ளிரவில் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞரால் அதிர்ச்சி !

இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரிடம் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கூறியுள்ளார். உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து அந்நபர் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த அந்த கொடூர இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை.. கொடூர இளைஞரால் அதிர்ச்சி !

குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் மூதாட்டியை வீட்டில் புகுந்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like