1. Home
  2. தமிழ்நாடு

வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

1

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், CPI-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாநில செயலர் முத்தரசன் தலைமையில் நடந்த நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில், 31 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் தொகுதிக்கு ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பாப்பா மோகன், ரவி, ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலர் பெரியசாமி, தற்போதைய எம்.பி., சுப்பராயன் ஆகியோரை மாவட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.

அதேபோல, நாகப்பட்டினம் தொகுதியில் தற்போதைய எம்.பி., செல்வராஜ், மாவட்ட செயலர் செல்வராஜ், லெனின், ராஜா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள். ஏழு பேர் புதுமுகங்கள்.

கட்சி விதிகளின்படி, இரண்டு முறைக்கு மேல் ஒரு நிர்வாகி தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதாலும், 70 வயதுக்கு மேற்பட்டவர், மற்றவர்களுக்கு வழிவிட்டு, கட்சி பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்பதாலும், இரண்டு தொகுதிக்கும் புதுமுகங்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில், திருப்பூர் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.இதில், ஏற்கெனவே திருப்பூர் MP-யாக உள்ள கே.சுப்பராயன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, நாகை தொகுதி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் நாகை வேட்பாளராக மா. செல்வராசு போட்டியிட்டார்.   

Trending News

Latest News

You May Like