ஒடிசா தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் ராஜினாமா..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2f29f266fc067f187d14a51cfe7fe6ae.jpg?width=836&height=470&resizemode=4)
ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒடிசா சிறப்பு திட்ட ஆலோசகர் பதவியை தமிழகத்தின் ஆர்.பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆர்.பாலகிருஷ்ணனை நவீன் பட்நாயக் அரசியல் பதவியில் நியமித்திருந்தார். ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் சுரேஷ் சந்திர மகோபத்ராவும் பதவி விலகினார்.
முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். பாலகிருஷ்ணன், சுரேஷ் மஹாபத்ரா மற்றும் உபேந்திர திரிபாதி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.