1. Home
  2. தமிழ்நாடு

இன்று திருப்பதி ஏழுமலையானுக்கு இப்படி விரதம் இருங்க...செல்வங்களை அள்ளிக் கொடுப்பார்..!

1

திருப்பதி ஏழுமலையானை மனதார எங்கிருந்து நினைத்து, நீங்கள் மனதார வேண்டிக் கொண்டாலும் அந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றி வைப்பார். இது பலரது வாழ்விலும் அனுபவ ரீதியாக நடந்துள்ளது. மனதார அவரை நம்பி வழிபட்டு, பக்தி செய்பவர்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் வைப்பார். அதனால் தான் திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என சொல்லப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானின் அருளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல வேறு மாதத்தில் வரும் சனிக்கிழமையிலும் திருப்பதி ஏழுமலையானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கும். அனைத்து விதமான செல்வ நலன்களையும் ஏழுமலையான் அள்ளிக் கொடுப்பார். கலியுகத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து மீட்பதற்காக அமைந்த தலம் என்பதாலேயே திருப்பதியை கலியுக வைகுண்டம் என போற்றுகிறோம். சனிக்கிழமையில் ஏழுமலையானுக்கு எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சனிக்கிழமை விரதமுறை :


* சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், வீட்டில் உள்ள பூஜையறையை சுத்தம் செய்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.

* திருப்பதி ஏழுமலையான் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாக படைக்க வேண்டும். திருப்பதி ஏழுமலையானின் படம் இல்லாவிட்டால், வீட்டில் எந்த பெருமாளின் படம் இருந்தாலும் அதை வைத்து வழிபடலாம். பெருமாளின் படம் இல்லா விட்டாலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் கூட போதும்.

* பெருமாள் படத்திற்கு மறக்காமல் ஒரே ஒரு துளசி இலைகளையாவது படைத்து வழிபட வேண்டும். அல்லது துளசி கலந்த தண்ணீரை படைப்பதும் விசேஷமானதாகும்.

* விரதம் இருப்பவர்கள் மஞ்சள் நிற உடையணிந்து, மஞ்சள் நிற மலர்களை பெருமாளுக்கு படைத்து, ஏதாவது இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

* முடிந்தவர்கள் துளசி தண்ணீர் மட்டும் குடித்து, முழு நாளும் உபவாசமாக விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டோ அல்லது ஒரு வேலை உணவை மட்டும் தவிர்த்தோ அல்லது சைவமாக எளிமையான உணவுகளை சாப்பிட்டோ விரதம் இருக்கலாம்.

* நாள் முழுவதும் பெருமாளின் நினைவில் இருக்க வேண்டும். பெருமாள் நம்முடனேயே இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன், ஓம் நமோ நாராயணா மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

* சனிக்கிழமையில் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நாராயணனின் வடிவங்கள் நினைத்து, மற்றவர்களிடம் அன்பாகவும், முடிந்த உதவிகளை செய்தும் பெருமாளை வழிபட வேண்டும். இப்படி விரதம் இருந்தால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் ஏழுமலையான் காதுகளில் விழும். ஏதாவது ஒரு வடிவத்தில் ஏழுமலையானே வந்து உங்களுக்கு உதவி செய்வார்.

Trending News

Latest News

You May Like