1. Home
  2. தமிழ்நாடு

இனி 6 மணி 20 நிமிடங்களில் சென்னை டூ மைசூரு போகலாம்..! பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

1

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நாட்டின் 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (சென்னை-பெங்களூரு)15 மாதங்களை கடந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே வழித்தடத்தில் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

 இது தினசரி காலை 6 மணிக்கு மைசூருவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். மாண்டியா (6.28), பெங்களூரு (7.45), கிருஷ்ணராஜபுரம் (8.04), காட்பாடி (10.33) வழியாக நண்பகல் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு காட்பாடி (6.23), கிருஷ்ணராஜபுரம் (8.48), பெங்களூரு (9.25), மாண்டியா (10.38) வழியாக இரவு 11.20 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. வாரந்தோறும் புதன் கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.சென்னை - மைசூரு முதல் வந்தே பாரத் ரயில் இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் நான்கு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் 6 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணிக்கும் நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ரயில் கூடுதல் ரயில் நிலையங்கள் உடன் 6 மணி நேரம் 20 நிமிடங்களில் பயணிக்கிற்து. 

சென்னை - மைசூரு இடையே பெங்களூரு வழியாக ஏற்கெனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதே தடத்தில் கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். 5-ம் தேதியில் இருந்து மைசூரு வரை செல்லும்.

கொல்லம் - திருப்பதி புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். தவிர, திருவனந்தபுரம் - காசர்கோடு இடையிலான வந்தே பாரத் ரயில், மங்களூரு வரை நீட்டிக்கப்பட உள்ளது. 

Trending News

Latest News

You May Like