1. Home
  2. தமிழ்நாடு

இனி பஞ்சாமிர்தம் வாங்கும் போது இதையும் சேர்த்து வாங்குங்க..!

1

கேரளா ஐயப்பன் கோயில், திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதங்கள் விற்பனையின் போது ரசீது கொடுப்பது போல் இனி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கு ரசீது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது 

பழநியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தம், உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், அதன் விற்பனைக்கு பிரசாத ஸ்டால்களில் ரசீது வழங்குவதில்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, சில விற்பனையாளர்கள் அளவு குறைவாகவும், அதிக விலைக்கும் விற்கின்றனர். கேள்வி எழுப்பும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். வெளி மாநில பக்தர்களிடம் இந்த ஏமாற்று வேலை அதிகம் நடக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விற்பனையாகும் பஞ்சாமிர்தத்திற்கு ரசீது வழங்குவது துவங்கியுள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கோவில் தரப்பில்,'பஞ்சாமிர்தம் விற்பனைக்கு ரசீது வழங்குவது துவங்கியுள்ளது' என கூறி, போட்டோ ஆதாரத்தை சமர்ப்பித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Trending News

Latest News

You May Like