1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்களுக்கு அறிவிப்பு..! இன்றும் நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தம்..!

Q

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும்,திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.பக்தர்கள் படிப்பாதை,யானைப் பாதை,மின் இழுவை ரயில்,ரோப் கார் சேவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு முறை என, ஒரு வருடத்திற்கு மொத்தம் 45 நாட்கள் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு வேலைகள் செய்த பின் மீண்டும் இயக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் இன்றும் நாளையும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது.
மேலும் இன்று காலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ரோப்காரில் உள்ள சாப்ட்டுகள், பெட்டிகள்,கம்பி வடம் , உருளைகள் உள்ளிட்ட பணிகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நாளை பராமரிப்பு பணிகள் முடிந்த பின்பு சோதனை ஓட்டம் நடைபெறும்.நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் பக்தர்களுக்காக ரோப் கார் சேவை இயங்கப்படும் எனவும், அதுவரை பக்தர்கள் படிப்பாதை,யானை பாதை மற்றும் மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like