பிரபல மலையாள எழுத்தாளர் ஸ்ரீதேவி காலமானார்.. முதல்வர் இரங்கல்!
பாரம்பரிய பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி, இளம் வயதிலேயே எழுத்து உலகில் நுழைந்து நாவல்கள், கதைகள், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனது இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தினார். இந்திய புராணங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் கவனம் செலுத்தி குழந்தை இலக்கியத்திற்கான அவரது பங்களிப்புகள் பரந்த கவனத்தைப் பெற்றன.
நம்பூதிரி பிராமண சமூகத்தில் பெண்களின் வாழ்க்கையைப் பற்றியும் விரிவாக எழுதினார். ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகளில் ‘யக்ஞம்’, ‘பறைபெட்ட பந்திருகுளம்’, ‘அக்னிஹோத்திரம்’ போன்றவை அடங்கும். இலக்கியத் துறையில் ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க கேரள சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
இந்த நிலையில், கே.பி.ஸ்ரீதேவி கேரளாவின் கொச்சி திருப்புனித்துராவில் உள்ள வீட்டில் நேற்று காலமானார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஸ்ரீதேவி தனது எழுத்துக்கள் மூலம் சமூக அவலங்களை அம்பலப்படுத்தியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.