1. Home
  2. தமிழ்நாடு

ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை.. இது தான் ரயிலின் சொகுசு பயணம்.. மத்திய அமைச்சர் பெருமிதம் !

ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை.. இது தான் ரயிலின் சொகுசு பயணம்.. மத்திய அமைச்சர் பெருமிதம் !


பெங்களூரு - மைசூரு ரயில் பாதையில் ரூ.40 கோடி செலவில் 130 கி.மீ தூரத்திற்கு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இப்பணி சமீபத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து இப்பாதையில் ரயில் பயணம் சொகுசாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக ரயில்வே அதிகாரிகள் ஒரு எளிமையான சோதனை முறையை கையாண்டனர்.

ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை.. இது தான் ரயிலின் சொகுசு பயணம்.. மத்திய அமைச்சர் பெருமிதம் !

அதாவது ஒரு கண்ணாடி டம்ளரில் ததும்பும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி ஒரு ஓடும் ரயிலில் ஒரு மேஜையின் மேல் வைக்கப்பட்டது. ரயில் மொத்த தூரத்தையும் அதிவேகமாக கடந்து பயணித்தது. ஆனால் அந்த டம்ளரில் இருந்து ஒரு துளி தண்ணீர் கூட சிதறவில்லை.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெருமிதம் தெரிவித்துள்ளார். பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகளின் முடிவுகளை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like