1. Home
  2. தமிழ்நாடு

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஏக்கம்.. ஒரே அறையில் தூக்கில் தொங்கிய தம்பதி !

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஏக்கம்.. ஒரே அறையில் தூக்கில் தொங்கிய தம்பதி !


நெல்லை தச்சநல்லூரில் உள்ள நல்மேய்ப்பர் நகரில் மாரியப்பன் - வடிவு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

வடிவு ஏற்கனவே கருவுற்று மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் 4-வது முறையாக கருவுற்று 5 மாதம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டதால் தம்பதியர் இருவரும் மனவேதனை அடைந்தனர்.

இந்நிலையில், இருவரும் நேற்றிரவு இருவரும் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தப்போது இருவரும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஏக்கம்.. ஒரே அறையில் தூக்கில் தொங்கிய தம்பதி !

விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் - மனைவி இருந்த நிலையில், மீண்டும் கருச்சிதைவு ஏற்பபட்டதால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தம்பதியர் இருவரும் ஒரேவீட்டில் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like