கோவையில் வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடமாநில நபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் அருகே வடமாநில நபர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டில் வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வடமாநில நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.