1. Home
  2. தமிழ்நாடு

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல்  பரிசு பகிர்ந்தளிப்பு!

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல்  பரிசு பகிர்ந்தளிப்பு!


இயற்பியலுக்கான நோபல் மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. ரோஜர் பென்ரோஸ், ரிய்ன்ஹார்ட் கொன்செல், ஆண்ட்கியா கெஸ் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like